வெள்ளி, 13 பிப்ரவரி, 2009
உன்னை எப்படி மறப்பேன்!!!
காதறுத்த ஆட்டின் காரைக் குட்டிக்கும்
மொண்டி ஆட்டின் குட்டிக்கும் கல்யாணம் !
எருக்கம் பூவில் மாலை!
ஊனாங்கொடியில் ஊஞ்சல்!
சுள்ளிப்பூ மனப்பந்தல்!
தகர டப்பா மேளம்!
இலைச் சுருட்டு நாதசுரம்!
இணையற்ற மகிழ்ச்சிக் களிப்பு....!
உன்னோடு கழித்த அந்தப் பொழுதைக்கூட
நெஞ்சில் சுமக்கிறேன், இன்னும்...,
உன்னை எப்படி மறப்பேன்!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக